ரம்புக்கனை, யடகம பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு ஒலிபரப்பு கோபுரத்தில் பொருத்தப்பட்ட கேபிள்களை திருடிய சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் இருந்த 13 கிலோ கிராம் திருடப்பட்ட செப்பு கம்பிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யபப்பட்டுள்ளது.
ரம்புக்கனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸழர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரம்புக்கனையை வசிக்கும் 31 வயதுடையவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.












