திருக்கோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் நேற்றிரவு (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இலங்கைத்துறை முகத்துவாரத்திலிருந்து புன்னையடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில், முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஜமனராஜ் ஜதுர்ஷன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நேற்று (01) இரவு சுமார் 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















