மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் இன்று ( 05 ) அதிகாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையின் தேடுதல் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் , கிராம மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தேடுதல் நடவடிக்கை நடைபெற்றதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.


















