கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்ப பெண்ணொருவர் , மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அம்பாள் குளம் பகுதியை சேர்ந்த 23வயதுடைய அஜித்குமார் ரவீனா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கடந்த 31ஆம் திகதி மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் , கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அங்கிருந்து கடந்த 3ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.














