• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/01/12
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டின் கரூரில் நடந்த கட்சி பேரணியின் போது 41 பேர் உயிரிழந்த 2025 செப்டம்பர் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான விஜய் இன்று டெல்லியில் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) முன் முன்னிலையாகவுள்ளார்.

விஜய் சென்னையிலிருந்து ஒரு தனி விமானத்தில் புறப்பட்டு டெல்லியை சென்றடைந்துள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் CBI தலைமையகத்தில் விசாரணைக்காக முன்னிலையாகுவார் என்று கூறப்படுகிறது.

கரூர் மாவட்டம் வேலுசுவாமிபுரத்தில் 2025 செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற TVK இன் அரசியல் பேரணியின் போது ​​கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

விஜயை காண்பதற்கும், அவரது அரசியல் உரையினை கேட்பதற்கும் மணிக்கணக்காக அதிகளவிலானோர் ஒன்று திரண்டதனால் இந்த நிலை ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்த துயர சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, CBI முன்னதாக TVK உயர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு மேற்கண்ட அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், இந்த சம்பவம் குறித்து CBI  விசாரணை நடத்துவதை தமிழக அரசு எதிர்த்தது, அதற்கு பதிலாக வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.

சட்டம் ஒழுங்கு மாநிலப் பிரச்சினை என்பதால், இந்த சம்பவத்தை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழு போதுமானது என்று அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.

எனினும், கரூர் கூட்ட நெரிசல் “தேசிய மனசாட்சியை உலுக்கியதாக” குறிப்பிட்டு, சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவாதம் அளித்த உயர் நீதிமன்றம், விசாரணையை  CBIக்கு மாற்றியது.

சிறப்பு விசாரணைக் குழுவைத் தொடர வேண்டும் என்ற அரசின் வேண்டுகோளை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து, மத்திய நிறுவனம் விசாரணையை மேற்கொள்ள அனுமதித்தது.

வழக்கினை பொறுப்பேற்றதிலிருந்து CBI, நிகழ்வுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள், கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள், காவல்துறையினர் பணியமர்த்தல் மற்றும் அவசரகால நடவடிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறது.

அதே நேரத்தில் டிவிகே நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களையும் பதிவு செய்து வருகிறது.

இந்த வழக்கில் விசாரணை ஆணையத்தின் முன்னதாக முன்னிலையானவர்களில் TVK மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர்கள் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுன், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் அடங்குவர்.

Related

Tags: Karur stampedetvkகரூர் கூட்ட நெரிசல்விஜய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முச்சக்கர வண்டி திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது!

Next Post

சுவாசிக்க சிரமப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

Related Posts

பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்
அம்பாறை

பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

2026-01-12
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!
கிளிநொச்சி

சுவாசிக்க சிரமப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

2026-01-12
முச்சக்கர வண்டி திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது!
இலங்கை

முச்சக்கர வண்டி திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது!

2026-01-12
அனைத்து வாகனப் பதிவுகளுக்கும் TIN இலக்கம் இப்போது கட்டாயமாகும்!
இலங்கை

அனைத்து வாகனப் பதிவுகளுக்கும் TIN இலக்கம் இப்போது கட்டாயமாகும்!

2026-01-12
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக வைத்தியர். ஹில்மி முஹைதீன் பாவா நியமனம்!
கிழக்கு மாகாணம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக வைத்தியர். ஹில்மி முஹைதீன் பாவா நியமனம்!

2026-01-12
கச்சத்தீவு திருவிழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த மீனவர்கள்.!
இலங்கை

கச்சத்தீவு திருவிழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த மீனவர்கள்.!

2026-01-12
Next Post
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

சுவாசிக்க சிரமப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

0
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!

0
முச்சக்கர வண்டி திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது!

முச்சக்கர வண்டி திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது!

0
பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை -தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச !

0
ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது!

0
பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

2026-01-12
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

சுவாசிக்க சிரமப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

2026-01-12
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!

2026-01-12
முச்சக்கர வண்டி திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது!

முச்சக்கர வண்டி திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது!

2026-01-12
பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை -தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச !

2026-01-12

Recent News

பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

2026-01-12
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

சுவாசிக்க சிரமப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

2026-01-12
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்!

2026-01-12
முச்சக்கர வண்டி திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது!

முச்சக்கர வண்டி திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது!

2026-01-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.