யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் தற்போது அதிகளவான இறால் மீனவர்களினால் பிடிக்கப்பட்டு வருகின்றன
பிடிக்கப்படும் இறால் தரம் பிரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன எனவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.
வடக்கு கடலில் தற்போது இறால் பிடிபடும் பருவம் என்பதால் வடக்கு மீனவர்கள் வருமானம் ஈட்டுவதற்கு ஆர்வமாக உள்ள போதும் இந்தியன் இழுவைமடி படகுகளின் அத்துமீறிய வரத்தால் இறால் தொழிலும் கேள்விக்குறியாகியுள்ளது.














