மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பஸ் தரிப்பு நிலையம் குன்றும் குழியுமாக நீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இப் பகுதியில் பல்வேறு கடைத்தொகுதிகள் காணப்படுகின்ற நிலையில், சுகாதார சீர்கேடாக காணப்படுகின்றதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதனை சீர் செய்ய உரிய அதிகாரிகள் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.வீதியிலும் நீர் தேங்கி நிற்பதனால் இதற்கு முறையான வடிகால் வசதியும் தேவை எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
















