யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் இன்று சுபவேளையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
ஆலயத்தின் பாலஸ்தானத்தை தொடர்ந்து கடந்த 09ஆம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் நேற்று பிற்பகல் 2 மணிவரை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து இன்று காலை 11மணிக்கு மகாகும்பாபிஷேகத்திற்கான கிரிகைகள் இடம்பெற்றிருந்ததுடன் குடமுழுக்கு நிகழ்வும் இடம்பெற்றது.
இன்று காலை 7.30 மணிக்கு கணபதிவழிபாடு, புண்ணியாகசளமும் இடம்பெற்றது.
பிரதிஷ்டா பிரதமதகுருவாக சிவாஸ்ரீ தியாக மயூரகிரிக்குருக்களுடன் இணைந்து ஆலயகுருவான சிவஸ்ரீ க.நிரஞ்சனசர்மா இன்றைய மகானும்பாபிசேகத்தினை சிறப்பாக நடத்தியிருந்தனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயில், கல்லூரியின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதான ஆலயமாககும்.
பல ஆண்டுகளாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருள்பாலித்து வரும் வைரவமூர்த்தி, நல்லை ஆதீனத்தின் ஆசியுடன் நிர்வகிக்கப்பட்டு, பல கும்பாபிஷேகப் பெருவிழாக்களையும் கண்டுள்ளது.
நீண்டகாலமாக யாழ்.இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் சிவஞான வைரவர் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வேண்டியதைத் தரும் மூர்த்தியாகக் பல வேண்டுதல்களை சிவஞான வைரவர் பெருமான் நிறைவேற்றி வைத்துள்ளார்.
சிவஞான வைரவருடன், வித்யா கணபதி மற்றும் தண்டாயுதபாணி ஆகிய தெய்வங்களும் ஆலயத்தில் எழுந்தருளியுள்ளனர்.
மாணவர்களின் கல்வி விருத்தி மற்றும் பாதுகாப்பிற்காகப் பிரத்தியேக வழிபாடுகள் மற்றும் சிறப்புப் பூசைகள் பாடசாலை நாட்களில் நடத்தப்படுகின்றன.
யாழ். இந்துக்கல்லூரியின் நீண்ட வரலாற்றோடு இணைந்த, கல்வியையும் பண்பாட்டையும் காக்கும் ஒரு முக்கிய ஆலயமாக இது விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
















