நாட்டில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 சந்தேக நபர்களை இங்கிலாந்துப் பொலிஸார் கைது செய்து வருவதாக தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான குற்றங்களில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மாதம் ஒன்றுக்கு 500 முதல் 800 வரை இருந்த கைதுகள் தற்போது 1,000 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக 2026 ஜனவரி மாதத்தின் ஒரு வாரத்தில் மாத்திரம் இங்கிலாந்து முழுவதும் 252 நபர்கள் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 118 பேர் மீது அப்போது குற்றம்சாட்டப்பட்டது, 35 பேருக்கு நீதிமன்றில் தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் 407 சிறுவர்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குற்றவாளிகள் இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் மூலமாக சிறுவர்களை அணு இவ்வாறான குற்றத்தை அதிகளவில் புரிவதாக தேசிய குற்றவியல் நிறுவன பொது நடவடிக்கைகளின் பணிப்பாளர் ரோப் ஜோன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
















