சாவகச்சேரியின் நகரசபையின் பொண் விழா மண்டபத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு இன்றைய தினம் காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
இவ் மாநாட்டின் ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களால் மங்கள விளக்கு ஏற்றி ஆரம்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டு மிக சிறப்பாக ஆரம்பமானதுடன் இவ் மாநாட்டில் கட்சியின் எதிர் கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இவ் பேராளர் மாநாட்டில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இனைத்தலைவர்கள் கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












