2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று (28) நடைபெறும் 50 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியானது இன்று இரவு 07.00 மணிக்கு கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகும்.
இது சூப்பர் 8 சுற்றின் குழு 2 இன் ஒரு முக்கியமான போட்டியாகும்.
இங்கிலாந்து ஏற்கனவே மூன்று வெற்றிகளுடன் இந்த குழுவிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தனது கடைசி சூப்பர் 8 போட்டியை இன்று விளையாடும்போது, டி20 உலகக் கிண்ணத்தில் அரையிறுதி நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க, ஏற்கனவே வெளியேறிய இலங்கையை வீழ்த்தி ஒரு பெரிய வெற்றியைப் பெறுவது முக்கியமாகும்.
பாகிஸ்தான் தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து மூன்று புள்ளிகள் மற்றும் சிறந்த நிகர ஓட்ட விகிதத்துடன் மிகவும் வலுவான நிலையில் உள்ளது.
மறுபுறம் இலங்கை ஏற்கனவே இந்தத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
எனினும், ஒரு வெற்றி பெற்றால், அவர்கள் இந்த சூப்பர் 8 குழுவில் பாகிஸ்தானை விட முன்னேறுவார்கள்.
இணை போட்டியை நடத்தும் இலங்கையைப் பொறுத்தவரை, அவர்களின் இறுதிப் போட்டியில் ரசிகர்களுக்கு வெற்றியை வழங்குவதில் கவனம் செலுத்தப்படும்.
குழு நிலைப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்து ஒரு பெரிய வெற்றியுடன் வலுவான தொடக்கத்திற்குப் பின்னர், இலங்கை சிம்பாப்வே, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
ஆரம்ப விக்கெட்டுகள் இழப்பு, வலுவற்ற துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் மோசமான செயல்திறன் அணியை சிரமப்பட வைத்துள்ளது.
மேலும் அவர்கள் தங்கள் சொந்த மைதான போட்டியை சிறப்பாக முடிக்க இந்த ஆட்டத்தை பயன்படுத்த முயல்வார்கள்.
















