இந்தப் போட்டியானது அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்றிரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மிகவும் எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்தப் போட்டியில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது தனது மூன்றாவது டி:20 உலகக் கிண்ணப் பட்டத்தை கைப்பற்றும் நோக்குடன் இந்த ஆட்டத்தில் களம் காணுகின்றது.
அதேநேரத்தில், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணியானது தனது முதலாவது டி:20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ளும் நோக்குடன் இன்று ஆடுகளம் நுழைகின்றது.
மும்பையில் நடந்த பரபரப்பான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை ஏழு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சஞ்சு சாம்சனின் அபாரமான 89 ஓட்டங்களும், ஜஸ்பிரித் பும்ராவின் சிறப்பான பந்து வீச்சும் இந்த வெற்றியில் இந்தியாவுக்கு மிகவும் உறு துணையாக அமைந்தது.
அதேநேரத்தில், கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமான வெற்றியை பதிவு செய்தது.
ஃபின் ஆலனின் வெகமான சதம் மற்றும் கோல் மெக்கோன்சி, மேட் ஹென்றி, மற்றும் ரச்சின் ரவீந்திர ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சு நியூஸிலாந்து அணிக்கு இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
இந்தியாவும் நியூசிலாந்தும் இதுவரை 30 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
அதில் இந்தியா 18 வெற்றிகளையும், நியூஸிலாந்து 11 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
ஒரு போட்டி சமனிநிலையில் முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













