ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தனக்கு ஆர்வம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், தெஹ்ரானில் செயல்படும் இராணுவம் அல்லது அதிகாரத்தில் மீதமுள்ள எந்தத் தலைமையும் இல்லாதபோதுதான் ஈரான் போர் முடிவடையும் என்ற சாத்தியக்கூறு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சனிக்கிழமை (07) செய்தியாளர்களிடம் ஆன்லைனில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரானின் அனைத்து சாத்தியமான தலைவர்களும் கொல்லப்பட்டு ஈரானிய இராணுவம் முற்றிலுமாக அழிக்கப்பட்டால், வான்வழி தாக்குதல் பேச்சுவார்த்தைகளை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாறும் என்றார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், சனிக்கிழமை இஸ்ரேலும் ஈரானும் ஏராளமான தாக்குதல்களை பரிமாறிக்கொண்டன.
வளைகுடா முழுவதும் கோபத்தைத் தணிக்கும் முயற்சியாக அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் ஜனாதிபதி அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டார்.
எனினும், அவரது இந்த நடவடிக்கை உள்நாட்டில் உள்ள கடும்போக்காளர்களிடமிருந்து விமர்சனங்களை எழுப்பியது.
அதேநேரம், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் எந்தவொரு உறுப்பினரும் தங்கள் ஆயுதங்களை கைவிட்டுவிட்டால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரச தொலைக்காட்சியில் உரையாற்றுகையில் கூறினார்.
இதனிடையே, ஒஸ்லோவிலுள்ள அமெரிக்க தூதரகம் இன்று அதிகாலை வெடிவிபத்தில் சிக்கியமையினால் சிறு சேதங்களுக்கு உள்ளாது.
எனினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று நோர்வே பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துக்கு என்ன காரணம் அல்லது யார் சம்பந்தப்பட்டார்கள் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.












