டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சுமார் 300 முதல் 400 குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், நேற்றிரவு இரவு 11.50 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகவும் டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சுமார் 23 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளை முன்னெடுத்தன.
பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தற்போது, உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை என்று டெல்லி தீயணைப்பு சேவைகள் தெரிவித்தன.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியின் உத்தம் நகரில் வன்முறை வெடித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
மார்ச் 4 ஆம் தேதி ஜேஜே காலனியில் ஹோலி கொண்டாட்டங்களின் போது தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன் தொடர்பான தகராறில் தருண் (26) என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
















