கெர்பிலி (Caerphilly) பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தங்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 5-ஆம் திகதி மாலை சுமார் 5:45 மணியளவில், காெர்பிலியில் உள்ள அபெர்ட்ரிட்வர் (Abertridwr) பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் பதின்ம வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக அவசர சேவைகளுக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற அதிகாரிகள், 17 வயதான ட்ரிஸ்டன் கெர் (Tristan Kerr) என்பவரைச் சோதித்தபோது, அவர் உயிரிழந்துவிட்டமை உறுதி செய்யப்பட்டது.
சுமார் 9 முதல் 10 அங்குல நீளமுள்ள ‘ஜாம்பி கத்தி’யால் (Zombie knife) அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 முதல் 27 வயதிற்குட்பட்ட நான்கு பேரும் மெர்திர் கிரவுன் நீதிமன்றத்தில் (Merthyr Crown Court) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் நேற்றையதினம் நடைபெற்ற விசாரணையின் போது, அவர்கள் நால்வரும் தங்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை மறுத்து, ‘குற்றமற்றவர்கள்’ என வாதிட்டனர்.
இதேவேளை, இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை ஜூலை 24-ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், முழுமையான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 3-ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
சுமார் ஆறு வாரங்கள் வரை இந்த விசாரணை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நான்கு பிரதிவாதிகளும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















