முறையான கொள்முதல் நடைமுறைகளைப் புறக்கணித்து 2022 ஆம் ஆண்டில் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து மருத்துவப் பொருட்களைக் கொள்முதல் செய்ததன் மூலம் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேனா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பினை இன்று வழங்கியது.
இந்த தீர்ப்பின்படி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது சொந்த நிதியிலிருந்து 75 மில்லியன் ரூபாயை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அப்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தா மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜெயரத்ன ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாவை அரசுக்குக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜித் குணசேகரா மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் முன்னாள் பிரதிப் பணியாளரான துஷித சுதர்ஷனா ஆகியோரும் தலா ரூ. 50 மில்லியனை அரசுக்கு இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா மற்றும் மற்றொரு தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் பரிசீலித்த பின்னர் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.













