கண்டி, பல்லேகல பகுதியில் இன்று (02) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்லக்கேலே இராணுவ முகாம் அருகே கண்டி-திகான சாலையில், மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவர் உயிரிழந்ததுடன், மற்றொரு மாணவர் காயமடைந்துள்ளார்.
தற்சமயம் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












