பொதுமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட விசேட சலுகைத் திட்டமொன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சபையில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பொருளாதார நிவாரணத் தொகுப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மக்களுக்குப் புதிய சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு எதிர்க்கட்சியின் முதற்கோலாளர் கயந்த கருணாதிலக்க விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே சபை முதல்வர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விசேட பொதி ஜனாதிபதியினால் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.














