• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/15
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைன் போரில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய இராணுவ உதவியாக, 120,000 ட்ரோன்களை (Drones) வழங்கவுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் உக்ரைன் – ரஷ்யப் போரில், ட்ரோன்களின் ஆதிக்கம் இரு தரப்பிலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்குப் பெரும் வலுச் சேர்க்கும் வகையில், ஒரே கட்டத்தில் 1,20,000 ட்ரோன்களை வழங்கப் பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

இது போன்ற ஒரு பெரிய அளவிலான விநியோகம் இதுவரை இடம்பெற்றதில்லை எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பெர்லினில் இன்று நடைபெற்ற ‘உக்ரைன் பாதுகாப்புத் தொடர்புக் குழு’ கூட்டத்திற்கு முன்னதாக, பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, “மத்திய கிழக்கில் (ஈரான் போர்) கவனம் திசை திரும்பியுள்ள நிலையில், உக்ரைனை தாம் மறந்துவிடுவோம் என விளாடிமிர் புடின் நினைக்கிறார் எனவும் ஆனால், உக்ரைனுக்குத் தேவையான அமைதி கிடைக்கும் வரை தாம் அவர்களுடன் உறுதியாக நிற்போம் எனவும் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த உதவித் திட்டத்தில் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ட்ரோன்கள், உளவு பார்க்கும் ட்ரோன்கள், தளவாடங்களைக் கொண்டு செல்லும் ட்ரோன்கள் மற்றும் கடல்சார் திறன்கொண்ட ட்ரோன்கள் எனப் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளடங்கியுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை பிரித்தானிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

இதேவேளை, வாஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிரித்தானிய நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், உக்ரைனுக்கு மேலதிக ஆதரவை அறிவிக்கவுள்ளார்.

இதன்படி: 3.36 பில்லியன் பவுண்டுகள் கடனுதவியின் ஒரு பகுதியாக, 752 மில்லியன் பவுண்டுகள் உடனடி கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.

மேலும் “ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைன் தன்னைத் தற்காத்துக்கொள்ளத் தேவையான இராணுவத் தளவாடங்களை வாங்க இந்த நிதி உதவும்,” என ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் காரணமாக அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையாளர்கள் உக்ரைன் மீது கவனம் செலுத்த நேரமில்லாமல் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கவலை வெளியிட்டிருந்த நிலையில், பிரித்தானியாவின் இந்த அறிவிப்பு உக்ரைனுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

தரை மற்றும் வான்வழி ட்ரோன்களை மட்டுமே பயன்படுத்தி ரஷ்யாவின் ஒரு நிலையைத் தாம் முதன்முறையாகக் கைப்பற்றியுள்ளதாக செலென்ஸ்கி அண்மையில் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related

Tags: Russiauk newsUkrain
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

Next Post

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

Related Posts

ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!
இலங்கை

ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

2026-05-18
14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!
இலங்கை

14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-18
உத்தரபிரதேசத்தில் வேன் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் உயிரிழப்பு!
இந்தியா

உத்தரபிரதேசத்தில் வேன் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

2026-05-18
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இங்கிலாந்து

பொலிசாரின் வாகனத்தை மோதிவிட்டு தப்பி செல்ல முற்பட்ட நபருக்கு சிறைத்தண்டனை!

2026-05-18
கோட்டாபய அரசின் சர்க்கரை வரி குறைப்பு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதம்!
இலங்கை

கோட்டாபய அரசின் சர்க்கரை வரி குறைப்பு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதம்!

2026-05-18
லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!
இங்கிலாந்து

லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

2026-05-18
Next Post
பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது - நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

0
ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

0
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!

பிரதமர் இங்கிலாந்துக்கு பயணம்!

0
14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

0
2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!

2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!

0
சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

2026-05-18
ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

2026-05-18
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!

பிரதமர் இங்கிலாந்துக்கு பயணம்!

2026-05-18
14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-18
2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!

2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!

2026-05-18

Recent News

சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

2026-05-18
ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!

2026-05-18
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!

பிரதமர் இங்கிலாந்துக்கு பயணம்!

2026-05-18
14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

14 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.