உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடத்தப்படும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ‘ஏகிபசிகோ அமைதி நடைபயணம்’ இன்று அதன் இரண்டாவது நாளை எட்டியுள்ளது.
நேற்று தம்புள்ளை புனித நகரில் கோலாகலமாக ஆரம்பமாகிய இந்த ஆன்மீகப் பயணம், இன்றையதினம் காலை மாத்தளை – வரலாற்றுச் சிறப்புமிக்க அலுவிகாரையிலிருந்து ஆரம்பமாகியது. இன்று மாலைக்குள் இந்தப் பேரணி கண்டியில் உள்ள புனித தலாதா மாளிகையை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.













