போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட போதிலும், அமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க மாட்டோம் என்று ஈரான் உறுதியளித்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை (23) ஆரம்ப வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் 4 சதவீதம் உயர்ந்தன.
GMT சுமார் 00.25 மணியளவில், அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் ஒப்பந்தமான மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 4.06 சதவீதம் உயர்ந்து, 96.73 டொலராக வர்த்தகமானது.
சர்வதேச எண்ணெய் அளவுகோலான பிரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 3.62 சதவீதம் உயர்ந்து 105.63 டொலர்களாக வர்த்தகமானது.
அதைத் தொடர்ந்த நிமிடங்களில் இரண்டினதும் விலைகள் சரிந்தன.
பெப்ரவரி 28 அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
போர் மீண்டும் தொடங்குமா என்ற நிச்சயமற்ற தன்மையால் அவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பிராந்தியத்தை ஆட்கொண்டுள்ள போர் மீண்டும் தொடங்குவதற்கான காலக்கெடு நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் அவகாசம் அளிக்கும் வகையில், போர் நிறுத்தத்தை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று கூறியிருந்தார்.
பாகிஸ்தானின் முயற்சிகளை வரவேற்பதாக ஈரான் கூறியது, ஆனால் ட்ரம்பின் அறிவிப்பு குறித்து வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.















