இங்கிலாந்தில் நடைபெறும் அறுவை சிகிச்சைகளில் குறைந்தது பத்தில் ஒன்று, 24 மணி நேரத்திற்குள் இரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இறுதி நேர இரத்துகளில் கிட்டத்தட்ட பத்தில் நான்கு அறுவை சிகிச்சைகள் தவிர்க்கக்கூடியவையாக இருந்தன என்று தேசிய சுகாதார சேவை நடத்திய ஒரு முக்கிய ஆய்வு தெரிவிக்கிறது.
அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பை வலுப்படுத்துவது தேசிய சுகாதார சேவைக்கு ஒரு முன்னுரிமையாக இருக்க வேண்டும், இல்லையெனில் காத்திருப்போர் பட்டியல்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கும் அபாயம் உள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் அனஸ்தீசியாவில் (British Journal of Anaesthesia) வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, 2024 நவம்பர் 11 முதல் நவம்பர் 18, வரையிலான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தக் காலப்பகுதியில், 78 தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகளில் 22,573 அறுவை சிகிச்சைக்கு முந்தைய மதிப்பீட்டு சந்திப்புகளும் 19,905 திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளும் அடங்கும்.
அறுவை சிகிச்சைக்கு முந்தைய தரவுகளைத் தெரிவிக்காதவை உட்பட, பங்கேற்ற 91 அறக்கட்டளைகளில் 2,190 அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.
திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் 24 மணி நேரத்திற்குள் இரத்து செய்யப்படுவதற்கான தேசிய விகிதம் 10% ஆக இருந்தது என்று பகுப்பாய்வில் கண்டறியப்பட்டது.
இரத்து செய்யப்பட்டதற்கான முதல் மூன்று காரணங்கள் கடுமையான மருத்துவ நிலைமைகள், பட்டியல் நீட்டிப்பு மற்றும் நோயாளிகள் சமூகமளிக்காமை ஆகியவை ஆகும்.
எனினும் ஆய்வின்படி, இரத்து செய்யப்பட்டவற்றில் சுமார் 37.3% தவிர்க்கக்கூடியவையாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.















