ஆஸ்திரேலியாவில் பிரித்தானியச் சுற்றுலாப் பயணி ஒருவரைக் கொலை செய்த நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி விசாரணையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள அல்புரியில் (Albury), பிரித்தானியச் சுற்றுலாப் பயணியான ராய்ஸ் மல்லெட் (Royce Mallett) என்பவரைக் கொலை செய்த டேவிட் சம்மர்ஸ்-ஸ்மித் (29), மனநலக் குறைபாடு காரணமாகக் குற்றவாளியாகக் கருதப்பட முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரித்தானியாவின் கவுண்டி டர்ஹாம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயது ராய்ஸ் மல்லெட், கடந்த 2024 ஆம் ஆண்டு அல்புரியில் உள்ள விடுதி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் தனது காரில் ஏறிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த டேவிட் சம்மர்ஸ்-ஸ்மித், எவ்வித உரையாடலுமின்றித் திடீரென ராய்ஸின் மார்பில் கத்தியால் குத்தியா நிலையில் ராய்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (28) நடைபெற்ற போது, நீதிபதி
டேவிட் சம்மர்ஸ்-ஸ்மித் இக்கொலையைச் செய்தது உறுதி செய்யப்பட்டாலும், அவர் நீண்டகாலமாக. ஸ்கிசோபெர்னியா (Schizophrenia) மற்றும் மனநோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்
எனவே, சட்டப்படி அவர் இக்கொலைக்கு பொறுப்பாளியாகக் கருதப்பட முடியாது என தெரிவித்து அவரை மனநலக் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளி சம்மர்ஸ்-ஸ்மித் மெத்தாம்பேட்டமைன் (Ice) மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதும், தாக்குதல் நடத்திய பின்னர் அவரே பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவரது மனநிலை குறித்து மனநல மறுஆய்வு தீர்ப்பாயம் அவ்வப்போது ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.













