• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர்  கடும் நடவடிக்கை !

தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர் கடும் நடவடிக்கை !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/29
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

நீண்டகாலமாக வீடற்ற நிலையில் ஒரு வீட்டில் நான்கு ஐந்து குடும்பங்களாக வாழ்ந்து வந்த தொழிலாளி ஒருவர், தனக்கென ஒரு தற்காலிக குடிசையை அமைத்தபோது, முழு முகத்தையும் மூடிய தலைக்கவசம் அணிந்த ஒரு குண்டர் கும்பல் புகுந்து அங்கிருந்தவர்களைக் கடுமையாகத் தாக்கி குடிசையையும் உடைத்துள்ளது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்திய இந்த கும்பல் குறித்து தகவல் கிடைத்தவுடன், தான் உடனடியாக கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு சட்டத்தை அமுல்படுத்துமாறு பணிப்புரை விடுத்ததாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அதன் விளைவாக அன்றிரவே தாக்குதலில் ஈடுபட்ட ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தோட்ட நிர்வாகத்தினால் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஓய்வுபெற்ற முப்படையினரை உள்ளடக்கிய பாதுகாப்பு குழுவினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அநீதிக்குள்ளான தோட்ட இளைஞர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்டத்தரணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பைத் தான் வழங்கியதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருடன் நேரடியாக அத்தோட்டத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிலைமைகளை நேரில் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்து அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய பிரதி அமைச்சர், இது தொடர்பாக மூன்று முக்கிய தீர்மானங்களை முன்னெடுத்துள்ளார்.

அதன்படி, பாதுகாப்பு குழு என்ற பெயரில் ஓய்வுபெற்ற முப்படையினரை அமர்த்தி அவர்களை குண்டர் படையாகச் செயற்பட அனுமதித்தது குறித்து தோட்ட நிர்வாகம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நிர்வாகம் எடுக்கப்போகும் ஒழுங்கு நடவடிக்கைகள் என்ன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தோட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியை அவர்களுக்கே வீடமைக்க வழங்குவதற்கான ஆவணங்களை உடனடியாகத் தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

தோட்ட நிர்வாகத்தின் நிறைவேற்று அதிகாரியை நேரடியாக அழைத்து எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவித்த பிரதி அமைச்சர், எக்காரணம் கொண்டும் பாதுகாப்புப் படையினரை மக்களைத் துன்புறுத்தப் பயன்படுத்தக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இச்சம்பவம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு மலையக மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இவ்வாறான அநீதிகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும், இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கம் என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்றைய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: KahawattaRatnapurasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகார சபை!

Related Posts

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகார சபை!
இலங்கை

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகார சபை!

2026-04-29
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!
இலங்கை

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால தலைவராக இரான் விக்ரமரட்ன நியமனம்!

2026-04-29
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை
இலங்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

2026-04-29
செம்மணியில் மனித புதைகுழியிலிருந்து 2 எலும்பு கூடுகள் முழுமையாக மீட்பு!
இலங்கை

செம்மணியில் மனித புதைகுழியிலிருந்து 2 எலும்பு கூடுகள் முழுமையாக மீட்பு!

2026-04-29
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் கைது

2026-04-29
டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்து விபத்து – 20கும் மேற்பட்டோர் காயம் – ஒருவர் உயிரிழப்பு!
இலங்கை

டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்து விபத்து – 20கும் மேற்பட்டோர் காயம் – ஒருவர் உயிரிழப்பு!

2026-04-29

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர்  கடும் நடவடிக்கை !

தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர் கடும் நடவடிக்கை !

0
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகார சபை!

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகார சபை!

0
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால தலைவராக இரான் விக்ரமரட்ன நியமனம்!

0
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

0
செம்மணியில் மனித புதைகுழியிலிருந்து 2 எலும்பு கூடுகள் முழுமையாக மீட்பு!

செம்மணியில் மனித புதைகுழியிலிருந்து 2 எலும்பு கூடுகள் முழுமையாக மீட்பு!

0
தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர்  கடும் நடவடிக்கை !

தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர் கடும் நடவடிக்கை !

2026-04-29
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகார சபை!

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகார சபை!

2026-04-29
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால தலைவராக இரான் விக்ரமரட்ன நியமனம்!

2026-04-29
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

2026-04-29
செம்மணியில் மனித புதைகுழியிலிருந்து 2 எலும்பு கூடுகள் முழுமையாக மீட்பு!

செம்மணியில் மனித புதைகுழியிலிருந்து 2 எலும்பு கூடுகள் முழுமையாக மீட்பு!

2026-04-29

Recent News

தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர்  கடும் நடவடிக்கை !

தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர் கடும் நடவடிக்கை !

2026-04-29
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகார சபை!

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகார சபை!

2026-04-29
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால தலைவராக இரான் விக்ரமரட்ன நியமனம்!

2026-04-29
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

2026-04-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.