ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காததைக் கண்டித்து, தமிழகத்தில் இன்று (08) தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் தலைமையில் போராட்டங்கள் வெடித்தன.
நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே) தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை வென்றபோதிலும், பெரும்பான்மை பெறுவதற்கு சுமார் 10 இடங்கள் குறைவாகப் பெற்றது.
காங்கிரஸின் ஆதரவுடன் கூட, அக்கட்சியால் 113 இடங்களை மட்டுமே எட்ட முடிந்தது.
இது, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்ற பெரும்பான்மையை விட இன்னும் குறைவாகவே உள்ளது.
வியாழக்கிழமை அன்று தமிழக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி,
இரண்டு நாட்களில் விஜய்யுடன் நடந்த இரண்டாவது சந்திப்பில், ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெறுவது ‘அவசியம்’ என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், விஜய்யின் ஆதரவாளர்கள் இந்த முடிவு தவறானது என்று கூறி, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இதற்கிடையில், அதிமுக மற்றும் திமுக இடையே ஒரு சாத்தியமான கூட்டணி குறித்த பேச்சும் அடிபடுகிறது, ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது உறுதிப்படுத்தலோ வெளியாகவில்லை.














