மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரித்தானியாவின் போர் விமானங்களுக்கு, ஈரானிய ட்ரோன்களை (Drones) மிகக் குறைந்த செலவில் சுட்டு வீழ்த்தக்கூடிய புதிய ஏவுகணை அமைப்புகள் (Missile Systems) பொருத்தப்படவுள்ளதாகப் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு (MoD) அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் அதிநவீன ‘ரோயல் எயார் ஃபோர்ஸ் டைபூன்’ (Royal Air Force Typhoon) ரக போர் விமானங்களில், ‘அட்வான்ஸ் டு பிரிசிஷன் கில் வெப்பன் சிஸ்டம்’ (APKWS) எனப்படும் அதிநவீன துல்லியத் தாக்குதல் ஆயுத அமைப்பு பொருத்தப்படவுள்ளது.
தற்போதைய ஏவுகணைகளுடன் ஒப்பிடுகையில், இது இலக்குகளை மிகத் துல்லியமாகவும், மிகக் குறைந்த செலவிலும் (at a fraction of the price) அழிக்கும் திறன் கொண்டது என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரை, இத்தகைய மலிவு விலை ட்ரோன்களை வானிலேயே அழிப்பதற்குப் போர் விமானங்களில் இருந்து ஏவப்படும் மிக விலையுயர்ந்த ஏவுகணைகளோ அல்லது அதிநவீன தரை-வான் ஏவுகணை அமைப்புகளோ (Surface-to-air missile systems) பயன்படுத்தப்பட்டு வந்தன.
தற்போது பிரித்தானியாவின் இந்த புதிய தொழில்நுட்ப நகர்வு, பாதுகாப்புச் செலவினங்களை பெருமளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.














