• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/17
in ஆபிாிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் நோய் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள கொங்கோ குடியரசில் எபோலா (Ebola) வைரஸ் நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருவதை அடுத்து, உலகளாவிய சுகாதார அவசர நிலை (Global Health Emergency) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட எபோலா தொற்று பரவலின் போது கொங்கோவில் சுமார் 1,000 பேர் உயிரிழந்திருந்தனர். அந்த வடு மாறுவதற்குள், தற்போது மீண்டும் எபோலா வைரஸ் அங்கு அதிவேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. தற்போதைய புதிய அலை பாதிப்பினால் அங்கு இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் 300க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொங்கோவின் எல்லைப் பகுதிகளில் இந்த வைரஸ் வேகம் எடுத்துள்ளதால், அதன் அண்டை நாடுகளான உகண்டா, தென் சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் மிக எளிதாகப் பரவக்கூடும் என சர்வதேச சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இந்தத் தொற்றை சர்வதேச கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசர நிலையாகப் பிரகடனம் செய்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ (X) வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

“கொங்கோவில் கட்டுப்பாடின்றி பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கம் காரணமாக உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. இந்தத் தொற்று ஏனைய நாடுகளுக்குப் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, நாடுகள் தங்களது சர்வதேச எல்லைகளை (International borders) உடனடியாக மூடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.”

எபோலா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட நாடுகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட மருத்துவக் குழுக்கள் அவசரமாகக் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related

Tags: africaepola virusworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெசிலின் மல்வானை இல்லம் – பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் தொடர்ந்தும் முற்றுகை!

Next Post

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

Related Posts

ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!
இலங்கை

ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

2026-05-17
போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!
உலகம்

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!

2026-05-17
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

ஈரானிய ட்ரோன்களை வீழ்த்த அதிநவீன ஏவுகணை அமைப்பை அறிமுகப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை!

2026-05-17
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

லண்டனில் நேற்றையதினம் இடம்பெற்ற இருவேறு பேரணிகளில் 43 பேர் கைது! பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நேற்று (16) பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இரண்டு எதிர் எதிர் பேரணிகள் நடைபெற்றன. தீவிர வலதுசாரி அரசியல்வாதியான டொமி ராபின்சனால் (Tommy Robinson) ஏற்பாடு செய்யப்பட்ட ‘யுனைட் த கிங்டம்’ (Unite the Kingdom) பேரணியும், அதற்கு இணையாகப் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியும் (pro-Palestinian demonstration) ஒரே நாளில் நடைபெற்றமையினால் லண்டன் நபிகரம் முழுவதும் பெருந்திரளான மக்கள் காணப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, இரு பேரணிகளுக்கும் நடுவே ‘பாதுகாப்பு வலயம்’ (Sterile zone) ஒன்றை பொலிஸார் உருவாக்கினர். இதற்காக 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதேவேளை, நேற்று இரவு 7:30 மணி வரையிலான நிலவரப்படி, இரு பேரணிகளிலும் ஏற்பட்ட மோதல் மற்றும் ஒழுங்கீனங்கள் தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டனர். கிங்ஸ்வே (Kingsway) பகுதியில் ஆரம்பமான ‘யுனைட் த கிங்டம்’ வலதுசாரி பேரணி, வைட்ஹால் (Whitehall) வழியாக நாடாளுமன்ற சதுக்கத்தை (Parliament Square) சென்றடைந்தது. இதில் கலந்துகொண்ட பலர் பிரித்தானியாவின் தேசியக் கொடிகளை ஏந்தியவாறும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பாணியில் “இங்கிலாந்தை மீண்டும் மகத்தானதாக்குவோம்” (MEGA) என்ற வாசகம் பொறித்த சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்தவாறும் காணப்பட்டனர். பேரணியின் போது தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எதிராக “எங்களுக்கு ஸ்டார்மர் பதவி விலக வேண்டும்” (we want Starmer out) என முழக்கமிட்டனர். இதேவேளை, தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் உடனடியாக வீழ்த்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

2026-05-17
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

2026-05-17
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!
இங்கிலாந்து

சவுத்போர்ட் கத்திக்குத்து சம்பவம் : பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ ஆவணங்களை பார்வையிட்ட 48 ஊழியர்கள் – மருத்துவமனை ஒப்புதல்!

2026-05-16
Next Post
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

0
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

0
மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்!

பெசிலின் மல்வானை இல்லம் – பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் தொடர்ந்தும் முற்றுகை!

0
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது!

0
ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

2026-05-17
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

2026-05-17
மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்!

பெசிலின் மல்வானை இல்லம் – பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் தொடர்ந்தும் முற்றுகை!

2026-05-17
ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

2026-05-17
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது!

2026-05-17

Recent News

அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

2026-05-17
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

2026-05-17
மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்!

பெசிலின் மல்வானை இல்லம் – பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் தொடர்ந்தும் முற்றுகை!

2026-05-17
ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

2026-05-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.