களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே இடம்பெற்ற ரயில் விபத்து காரணமாக ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த விபத்தால் சுமார் 200 அடி நீளமுள்ள ரயில் தண்டவாளங்கள், அதற்குப் பயன்படுத்தப்படும் கட்டைகள் மற்றும் ஏனைய உதிரிப்பாகங்கள் சேதமடைந்துள்ளதாக ரயில் பாதை மற்றும் பொறியியலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், சேதமடைந்த ரயில் பாதையின் பகுதிகள் தற்போது முழுமையாக சீர் செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த விபத்தின் போது ரயில் சமிச்ஞை கட்டமைப்பு மற்றும் ரயில் பெட்டிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ரயில் பாதை, சமிச்ஞை கட்டமைப்பு மற்றும் ரயில் பெட்டிகளுக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த சேதங்கள் உள்ளடக்கிய முழுமையான மதிப்பீட்டு அறிக்கை, எதிர்வரும் சில தினங்களுக்குள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.













