புவிக்கோளத்தின் காலநிலை வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலின் விளிம்பில் மனிதகுலம் நின்றுகொண்டிருக்கிறது.
நாம் சுவாசிக்கும் வளிமண்டலத்தில் வெப்பமும், நமது பெருங்கடல்களில் கொதிநிலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள 2026 மே,ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான உலகளாவிய பருவகால காலநிலை அறிக்கையானது, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஒரு புதிய ஆபத்துச் சங்கொலியை எழுப்பியுள்ளது.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தற்காலிகமாக அமைதி காத்த பசிபிக் பெருங்கடல், தற்போது மிக அதிவேகமாக வெப்பமடைந்து, மனிதகுலம் அஞ்சிய ‘எல் நினோ’ (El Niño) காலநிலையாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது.
இது வெறும் தற்காலிக வானிலை மாற்றம் அல்ல. மாறாக, உலகளாவிய உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் மனித வாழ்வாதாரத்தின் மீது தொடுக்கப்படவுள்ள ஒரு இயற்கைப் பேரழிவாகும்.
அறிவியல் மாதிரிகளின் அதிர்ச்சியூட்டும் கணிப்புநடப்பு 2026 மே முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ‘நினோ 3.4’ பிராந்தியத்தின் வெப்பநிலை இயல்பை விட 1.5^C வரை அதிகரிக்கும் என உலகளாவிய கணினி மாதிரிகள் (MME) 100% ஒருமித்த கருத்துடன் மிகத் துல்லியமாகக் கணித்துள்ளன.
பொதுவாக வசந்த காலத்தில் நிலவும் காலநிலை முன்கணிப்புச் சவால்களையும் தாண்டி, அனைத்து அறிவியல் மாதிரிகளும் இவ்வளவு உறுதியாக எச்சரிப்பது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
இந்த எல் நினோ தீவிரமடைதலானது, அதே காலகட்டத்தில் இந்தியப் பெருங்கடலில் உருவாகும் ‘நேர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனை’ (Positive IOD) மாற்றத்துடன் கைகோர்க்கவுள்ளது.
இந்த இரு பேராபத்துகளின் கூட்டுச் சேர்க்கை காரணமாக, உலகெங்கிலும் உள்ள நிலப்பரப்புகளில் 70% முதல் 80% வரை சராசரியை விட மிகக் கடுமையான வெப்ப அலைகள் (Heatwaves) உருவாகவுள்ளன.
இக்காலநிலை மாற்றம் உலக வரைபடத்தை இரண்டு தீவிர எல்லைகளுக்குள் தள்ளப்போகிறது. ஒருபுறம் அமேசான் காடுகளும், அவுஸ்திரேலியாவும், தென்கிழக்கு ஆசியாவும் வறட்சியின் பிடியில் கருகப் போகின்றன. மறுபுறம் மத்திய பசிபிக் பகுதிகள் முன்னெப்போதும் இல்லாத பெருவெள்ளத்தில் மூழ்கப் போகின்றன.

பசிபிக் பெருங்கடலின் பூமத்திய ரேகை பகுதியில் கடல் மேற்பரப்பு நீர் அசாதாரணமாக வெப்பமடையும் இந்த ‘எல் நினோ’ நிகழ்வு புதியதொன்றல்ல. ஆனால், அது தோன்றும் போதெல்லாம் உலகப் பொருளாதாரத்திற்கும் சூழலியலுக்கும் மரண அடியைக் கொடுத்துள்ளது. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 1982-1983 மற்றும் 1997-1998 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ‘சூப்பர் எல் நினோ’ உலகளவில் பில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பையும், ஆயிரக்கணக்கான உயிரழப்புகளையும் ஏற்படுத்தியது. மிக அண்மையில் 2015-2016 இல் ஏற்பட்ட எல் நினோ தாக்கத்தால் உலகளவில் கடுமையான வறட்சி, உணவுப் பற்றாக்குறை மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் கொடிய சூறாவளிகள் தோற்றம் பெற்றன.
ஆனால், அந்த வரலாறுகளை விட 2026 ஆம் ஆண்டின் எல் நினோ விபரீதமானது. காரணம், மனித நடவடிக்கைகளால் ஏற்கனவே புவி வெப்பமடைதல் அதன் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், இந்த புதிய எல் நினோ உருவாவது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போலாகும். கடல்சார் சூழலியல் மீதான கொடூரத் தாக்கம் பசிபிக் பெருங்கடலின் கிழக்குப்பகுதியில் கடல் வெப்பநிலை தீவிரமாக உயர்வதால், கடலின் வெப்பநிலையை நம்பி வாழும் பல்லுயிர்ச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். குறிப்பாக, ‘கடலின் நுரையீரல்’ என்று அழைக்கப்படும் பவளப்பாறைகள் வெளிறி அழிந்துபோகும் (Coral Bleaching) அபாயம் 2026 இன் பிற்பகுதியில் மிகத் தீவிரமடையும் என சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் சூழலியல் மீதான கொடூரத் தாக்கம்
மறுபுறம், வளிமண்டல சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களால் பூமியின் மாபெரும் கார்பன் உறிஞ்சிகளான அமேசான் காடுகள், ஆஸ்திரேலியாவின் காடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பசுமைப் பகுதிகள் கடுமையான வறட்சியின் பிடியில் கருகப் போகின்றன. இது காடுகளின் அழிவுக்கு வழிவகுப்பதுடன், கட்டுக்கடங்காத காட்டுத்தீயையும் உருவாக்கி, வளிமண்டலத்தில் கார்பன் உமிழ்வை பல மடங்கு அதிகரிக்கும். தெற்காசிய பிராந்தியமும் இலங்கையின் நீர்-எரிசக்தி நெருக்கடியும் உலக வானிலை அமைப்பின் 2026 மழைப்பொழிவு கணிப்பின்படி, இந்த எல் நினோ மற்றும் நேர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனையின் கூட்டுத் தாக்கம் தெற்காசிய பிராந்தியத்தில், குறிப்பாக இந்தியத் துணைக்கண்டத்திலும் இலங்கையிலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தவுள்ளது.

பிராந்தியத் தாக்கமும் நீர் நெருக்கடியும்: தெற்காசியாவின் நிலை
இக்காலகட்டத்தில் வழக்கமாகத் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விடப் பெருமளவில் பலவீனமடையக் கூடும் என இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.மழைப்பொழி
குடிநீர் ஆதாரங்கள் வற்றிப்போவதால், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் (யானை-மனித மோதல் போன்றவை) அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.கூட்டுச் செயல்பாட்டிற்கான இறுதித் தருணம் 2026 ஆம் ஆண்டில் எல் நினோ கட்டவிழ்த்து விடப்போகும் இந்த சுற்றுச்சூழல் அச்சுறுத்தல், மனித நாகரிகத்தின் பின்னடைவிற்கான தொடக்கமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தை உலகளாவிய காலநிலை அறிவியலாளர்கள் மத்தியில் விதைத்துள்ளது.

கூட்டுச் செயல்பாட்டிற்கான இறுதித் தருணம்
இது வெறும் வானிலை அறிக்கை அல்ல. மாறாக, நாடுகள் தங்களின் தழுவல் கொள்கைகளையும், நீர் மேலாண்மைத் திட்டங்களையும், பேரிடர் தயார்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் மாற்றிமைக்க வேண்டும் என்பதற்கான இறுதி எச்சரிக்கை.இயற்கையின் இந்த உக்கிரமான மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைந்து கார்பன் உமிழ்வைக் குறைப்பதும், உள்ளூர் அளவில் நீர் மற்றும் உணவு ஆதாரங்களைப் பாதுகாப்பதும் மட்டுமே வரவிருக்கும் பேராபத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரே கேடயமாகும்.















