மத்திய பிரதேசத்தில், 2 வயது பெண் குழந்தை உட்பட, 60 பேரை ஒரே நாளில் கடித்த தெருநாயை, மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி பகுதியில் வசிப்போரை, அங்குள்ள தெருநாய் ஒன்று சமீபத்தில் அடுத்தடுத்து கடித்தது.
பெண்கள், குழந்தைகள் என, 60 பேர் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, 2 வயது பெண் குழந்தையின் முகத்தை தெருநாய் கடித்து குதறியது.
குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், நாயிடம் இருந்து குழந்தையை காப்பாற்றினர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, மக்களை அச்சுறுத்திய தெருநாயை மாநகராட்சி ஊழியர்கள் தேடிப் பிடித்தனர்.
இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஏனைய பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறாமல் தடுக்க, பல்வேறு குழுக்களை அமைத்து, மாநகராட்சி நிர்வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.
நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பான வழக்கில், ரேபிஸ் பாதித்த மற்றும் ஆக்ரோஷமாக உள்ள தெருநாய்களை சட்டப்படி கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி வழங்கியது.
மேலும், பாடசாலைகள் , மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெருநாய்களை மீண்டும் அதே இடங்களில் விடவும் தடை விதித்தது.













