லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆறாவது சீசனுக்கான வீரர் தேர்வு நடவடிக்கையானது நேற்றைய (01) தினம் கொழும்பில் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்துள்ளது.
இதில் ஐந்து அணிகளும் வரவிருக்கும் சீசனுக்கான தங்கள் அணிகளை இறுதி செய்துள்ளன.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தகவலின்படி, வீரர் தேர்வில் 179 இலங்கை வீரர்களும் 242 வெளிநாட்டு வீரர்களும் என மொத்தம் 421 வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தத் தேர்வில் பிளாட்டினம், கோல்ட், கிளாசிக், எமர்ஜிங் மற்றும் அசோசியேட் ஸ்டார்ஸ் எனப் பல பிரிவுகளில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அணிகளைப் பொறுத்தவரை ஐந்து அணிகளில் நான்கு, புதிய உரிமையாளர்களையும் பயிற்சியாளர் குழுவையும் அறிவித்துள்ளன.
அதற்கேற்ற புதிய அணிப் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி மட்டுமே பெயர் மாற்றமின்றி இருந்தது – இருப்பினும், 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பு இரண்டு முறை உரிமையாளர் மாற்றங்களுடன், 2024-ஆம் ஆண்டில் அந்த அணி ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தைக் கடந்து வந்திருந்தது.
யாழ்ப்பாணம் இப்போது எஸ்.சி.ஜப்னா கிங்ஸ் என்றும், காலி இப்போது காலி கேலண்ட்ஸ் என்றும், கண்டி இப்போது கண்டி ரோயல்ஸ் என்றும், கொழும்பு இப்போது கொழும்பு கேப்ஸ் என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளன.
வீரர்கள் தேர்வு செயல்முறை நான்கு மணி நேரத்திற்கும் சற்றுக் குறைவான நேரத்தில் முடிவடைந்தது.
இதில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 18 வீரர்களைக் கொண்ட அணியைத் தேர்வு செய்தனர்.
மேலும் இறுதியில் கூடுதலாக இரண்டு வீரர்களை ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
வீரர்கள் பிளாட்டினம் (US$ 50,000), கோல்ட் (US$ 30,000), கிளாசிக் (US$ 20,000) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர்.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கெனத் தனித்தனிப் பிரிவுகள் இருந்தன.
மேலும், அசோசியேட் (US$ 15,000) மற்றும் வளர்ந்து வரும் 23 வயதுக்குட்பட்ட (US$ 10,000) வீரர்களுக்கெனவும் பிரிவுகள் இருந்தன.
அண்மையில் ஓய்வு பெற்ற இந்திய தேசிய வீரர் விஜய் சங்கர், ஐபிஎல்-இன் நட்சத்திர வீரராக உருவெடுத்த ஈஷான் மலிங்க, அதிரடி பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் அனுபவமிக்க ஜோடியான அஞ்சலோ மெத்யூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் குறிப்பிடத்தக்க முன்-ஒப்பந்தங்களில் சிலராவர்.
அதேசமயம், இலங்கை டி20 அணியில் இடம்பிடிக்க முடியாத போதிலும், அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் சரித் அசலங்க இருவரும் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் மொமஹமட் நவாஸ் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களின் தேர்வுகளில் முன்னிலை வகித்தனர்.

இறுதி அணிகள் பின்வருமாறு:
எஸ்.சி.ஜப்னா கிங்ஸ்: தஸ்கின் அகமட், துனித் வெல்லாலகே, ஷகிப் அல் ஹசன், பானுக ராஜபக்ஷ, அவிஷ்க பெர்னாண்டோ, டேவிட் வீசே, தில்ஷான் மதுஷங்க, கமில் மிஷார, டிரவீன் மேத்யூஸ், இப்ராஹிம் ஸத்ரான், மொஹமட் ஷிராஸ், சமிந்து விக்ரமசிங்க, நுவனிது பெர்னாண்டோ, சந்தீப் லமிச்சானே, லிசாட் வில்லியம்ஸ், தீபேந்திர ஐரீ, குகதாஸ் மதுலன், பிரவீன் மனிஷா மன்றும் நிஷான் மதுஷ்க.
கொழும்பு கேப்ஸ்: பென் மெக்டெர்மட், கமிந்து மெண்டிஸ், ஜிம்மி நீஷம், குசல் மெண்டிஸ், பினுர பெர்னாண்டோ, முஜீப் உர் ரஹ்மான், சதீர சமரவிக்ரம, மிலான் ரத்நாயக்க, ஜனித் லியனகே, ஷானவாஸ் தஹானி, ஜெஃப்ரி வாண்டர்சே, தனுக டபாரே, மொவின் சுபசிங்க, மொஹமட் ஹாரிஸ், ஹசன் மஹ்முத், குஷால் புர்டெல், மால்ஷா தருபதி, ஷருஜன் சண்முகநாதன், வனுஜ சஹான் மற்றும் அந்தோனி பிரகாசம்.
கண்டி ரோயல்ஸ்: விஜய் சங்கர், அஞ்சலோ மேத்யூஸ், மொயீன் அலி, வனிந்து ஹசரங்க, நுவன் துஷார, ரஹ்மனுல்லா குர்பாஸ், குசல் பெரேரா, அசித பெர்னாண்டோ, கருக சங்கேத், டேனியல் சாம்ஸ், விஷேன் ஹலம்பகே, முதித லக்ஷன், லஹிரு உதார, டேல் பிலிப்ஸ், ஜாஹிர் கான், பிராண்டன் மெக்முல்லன், சஹான் மிஹிர, பவன் சந்தேஷ், துஷான் ஹேமந்த மற்றும் இசித விஜேசுந்தர.
காலி கேலண்ட்ஸ்; லிட்டன் தாஸ், ஈஷான் மலிங்க, ரஸ்ஸி வான் டெர் டுசன், தசுன் ஷானக, சரித் அசலங்க, மொஹமட் நவாஸ், பிரமோத் மதுஷான், லசித் குரூஸ்புள்ளே, விஜயகாந்த் வியாஸ்காந்த், அகிஃப் ஜாவேத், சஹான் ஆராச்சிகே, சமிக்க கருணாரத்ன, தரிந்து ரத்நாயக்க, சாம் ஹார்பர், மெஹிதி ஹசன் மிராஸ், ஹைதர் அலி, தினுர களுபஹான, உறி கொத்திகொட, கசுன் ராஜித, சச்சிந்து கொலம்பகே.
தம்புள்ள சிக்சர்ஸ்: ரீசா ஹென்றிக்ஸ், தினேஷ் சந்திமால், சாஹிப்சாதா ஃபர்ஹான், துஷ்மந்த சமீர, மகீஷ் தீக்ஷண, ஃபசல்ஹக் ஃபரூகி, நிரோஷன் டிக்வெல்ல, பவன் ரத்நாயக்க, அகில தனஞ்சய, மொஹமட் வசீம், தனஞ்சய லக்ஷன், ரமேஷ் மெண்டிஸ், சச்சித ஜயதிலக, குல்பதின் நயீப், டயன் ஃபோரெஸ்டர், ஷாட்லி வான் ஷால்க்விக், விஷ்வ குமார மற்றும் கயான வீரசிங்க.













