இந்த ஆண்டில் இதுவரை இலங்கை முழுவதும் மொத்தம் 33,572 டெங்கு பாதிப்புகளும் 19 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேவின் கூற்றுப்படி,
மே மாதத்தில் மட்டும் 8,321 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இதில் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அதிகபட்ச எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன.
டெங்கு பரவுவதற்கான அதிக அபாயமுள்ள பகுதிகளாக 72 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளில் கிட்டத்தட்ட 50% மேற்கு மாகாணத்திலும், 16% தெற்கு மாகாணத்திலும், 9% சப்ரகமுவ மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.













