கடந்த ஐந்து வருடங்களாக கொடுப்பனவுகள் இன்றி வேலை செய்துவரும் சுகாதார ஊழியர்கள் நேர்முகத் தேர்வில் தம்மை உள்ளடக்காது நாளைய தினம் தெரிவு இடம்பெற உள்ளதாக தெரிவித்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
170 சுகாதாரத் தொண்டர்கள் நியமனம் தருவதாக சுகாதார அமைச்சர் கூறிய நிலையில் தமது பணியை முன்னெடுத்து வந்த வேலையில் நாளைய தினம் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் நேர்முகத் தேர்வுக்கு பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வைத்தியசாலைக்கு வழியே பதாகைகளை தாங்கியவாறு கோஷம் எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ரஜீவன் சம்பவ இடத்திற்கு வந்து இது தொடர்பில் சுகாதார அமைச்சுடன் கதைத்து ஒரு தீர்வைப் பெற்று தருவதாக போராட்டக்காரர்களுக்கு தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் ஆளுநர் அலுவலகம் சென்று தமது கோரிக்கை அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.












