லண்டனில் திருடப்படும் மொபைல் போன்களை மீண்டும் பயன்படுத்த முடியாதவாறு தொழில்நுட்ப ரீதியாக முற்றிலுமாக முடக்குவதற்கும், அதன் மூலம் குற்றவாளிகள் லாபம் ஈட்டுவதைத் தடுப்பதற்கும் முன்வருமாறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு லண்டன் மாநகரப் பொலிஸார் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைபேசி நிறுவனங்கள் தங்களிடம் திருடப்படும் சாதனங்கள் குறித்த தரவுகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும், திருடப்பட்ட கைபேசிகளைச் செயலற்றதாக்கும் கடுமையான நடைமுறைகளைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் பொலிஸ் ஆணையர் நாட்டின் உள்துறைச் செயலாளரிடம் புதிய சட்டம் ஒன்றை இயற்றுமாறு கோரியுள்ளார்.
திருடப்பட்ட கைபேசிகள் மீண்டும் ஏதேனும் ஒரு நெட்வொர்க்குடன் இணைக்கப்படுகின்றனவா என்பது உட்பட, அவற்றிற்கு என்ன நடக்கிறது என்ற உலகளாவிய விபரங்களை கண்டறிவதற்காக, ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து லண்டன் மாநகரப் பொலிஸார் தரவுகளைப் பகிரத் தொடங்கியுள்ளது.
















