இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக மூன்று போட்டிகள் கொண்ட டி:20 கிரிக்கெட் தொடரினை மேற்கிந்தியத்தீவுகள் அணி 2:1 என்ற கணக்கில் தனதாக்கியது.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) ஜமைக்கா, சபீனா பார்க்கின் கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துனித் வெல்லலே மாத்திரம் இலங்கை அணி சார்பில் அதிகபடியாக 28 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்தார்.
மேற்கிந்தியத்திவுள் சார்பில் ஷமர் ஜோசப் அதிபடியாக 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
பின்னர் 170 ஓட்டம் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேந்தியத்தீவுகள் அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது.
மேந்தியத்தீவுகள் சார்பில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் அதிகபடியாக 54 ஓட்டங்களை எடுத்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஷமர் ஜோசப் தெரிவானார்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 25 ஆரம்பமாகும்.















