• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/22
in இந்தியா, இலங்கை, தமிழகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 இலட்சம் இந்திய ரூபா மதிப்பிலான 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை இந்தியக் கடலோரப் பாதுகாப்புக் குழுமப் பொலிஸார் நேற்று (21) பறிமுதல் செய்துள்ளனர்.

மண்டபம் வடக்கு துறைமுகக் கடற்கரைப் பகுதியூடாக சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக்குத் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படவுள்ளதாக மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழுமப் பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த ரகசியத் தகவலையடுத்து, கடலோரப் பாதுகாப்புக் குழுமப் பொலிஸார் மண்டபம் வடக்கு துறைமுகக் கடற்கரைப் பகுதி முழுவதும் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கரையோரமாகச் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அமைந்திருந்த ஒரு குறிப்பிட்ட பகுதியை அதிகாரிகள் அதிரடிச் சோதனைக்கு உட்படுத்தினர்.

அந்தச் சோதனையின் போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகளில் சுமார் 300 கிலோ எடையுடைய பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மர்ம நபர்கள் கடத்தலுக்காகப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சர்வதேசச் சந்தையில் அதிக தேவையைக் கொண்டுள்ள இந்தக் கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கும், வைத்திருப்பதற்கும் இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 45 இலட்சம் இந்திய ரூபா இருக்கும் எனப் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கடல் அட்டை மூட்டைகள் அனைத்தும் மண்டபத்தில் உள்ள இந்தியச் சுங்கத் துறை அதிகாரிகளிடம் மேல்நடவடிக்கைகளுக்காகப் பொலிஸாரால் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவற்றை இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பின்னணியில் இருந்து செயற்பட்ட கடத்தல் கும்பலின் மர்ம நபர்கள் யார்? எந்தப் படகு மூலம் இவற்றை இலங்கைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்தனர்? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் கடலோரப் பாதுகாப்புக் குழுமப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: arrestindia newssrilanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

Next Post

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

Related Posts

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-06-22
களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!
இலங்கை

களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

2026-06-22
கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!
இலங்கை

கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

2026-06-22
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்!
இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்!

2026-06-22
வடக்கில் 15ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை!
இலங்கை

வடக்கில் 15ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை!

2026-06-22
மெட்ரோ பேருந்துகள் சேவைகள் தொடர்பல் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கவலை!
இலங்கை

மெட்ரோ பேருந்துகள் சேவைகள் தொடர்பல் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கவலை!

2026-06-22
Next Post
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

0
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

0
களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

0
கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

0
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்!

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-06-22
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

2026-06-22
களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

2026-06-22
கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

2026-06-22
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்!

2026-06-22

Recent News

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-06-22
மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

2026-06-22
களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

களுவாஞ்சிகுடி நகரில் எரி பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

2026-06-22
கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

கொழும்பில் மீனவர்கள் திடீர் சத்தியாக்கிரகம்: தீர்வு தராவிட்டால் 2000 மீனவர்களுடன் முற்றுகை என எச்சரிக்கை!

2026-06-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.