கொழும்பு – கிராண்ட்பாஸ், வீதியில் ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொள்கலன் பாரவூர்தி பேலியகொடை நோக்கித் திரும்ப முற்பட்டபோதே கவிழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தினால் தெமட்டகொடை – பேலியகொடை வீதியின் இரு வழித்தடங்களும் முற்றாகத் தடைப்பட்டுள்ளதுடன் விபத்து ஏற்பட்டுள்ள இடத்தை அண்மித்த பகுதிகளில் தற்காலிகமாக இருவழிப் போக்குவரத்து முறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான வாகனத்தை அகற்றும் மற்றும் வீதியைச் சீரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













