தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் பூகுவோக் (Phu Quoc) தீவுக்கு அருகே கடலில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல செல்போன் நிறுவனம் ஒன்று தனது விநியோகஸ்தர்களை சிறப்புச் சுற்றுலாவாக அழைத்துச் சென்றபோதே இந்த விபத்து நேரிட்டுள்ளது.
வியட்நாமின் அன்ஜியாங் மாகாணத்தில் உள்ள பூகுவோக் தீவுக்கு, இந்தியாவில் இருந்து 32 பேர் கொண்ட குழுவினர் சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா சென்றிருந்தனர்.
அங்கிருந்து ‘மே ரட் நகோய்’ என்ற தீவுக்கு அவர்கள் நேற்று படகில் புறப்பட்டுள்ளனர்.
படகில் மாலுமி உட்பட 4 ஊழியர்கள் இருந்துள்ளனர்.
இந்திய நேரப்படி காலை 11:30 மணியளவில் படகின் இன்ஜினில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால், கட்டுப்பாட்டை இழந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் கடலில் விழுந்துள்ளார்.
இதை அடுத்து வியட்நாம் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில் கடலில் தத்தளித்த 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதுடன் இந்த விபத்தில் 13 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
அவர்களில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.













