வடக்கு அயர்லாந்தின் லண்டன்டெரி (Londonderry) கவுண்டியில் உள்ள லிமாவாடி (Limavady) பகுதியிலும், டைரோன் (Tyrone) கவுண்டியில் உள்ள கோலிஸ்லேண்ட் (Coalisland) பகுதியிலும் நள்ளிரவில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு வேறு தீவைப்புத் தாக்குதல்கள் (Arson attacks) குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவங்களை அடுத்து தீயணைப்புப் படையினர், பொலிஸார் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் குழுவினர் இரு இடங்களுக்கும் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
லிமாவாடியின் கிளென்வியூ டிரைவ் (Glenview Drive) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதி ஒன்றில், ஆள் இல்லாத ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக மர்மப் பொருள் ஒன்று உள்ளே வீசப்பட்டதால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு 1:30 மணியளவில் இச்சம்பவம் குறித்துப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் தீவைப்புச் சம்பவத்தின் போது, புகை மூட்டத்திற்குள் சிக்கி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மற்றொரு சம்பவமாக கோலிஸ்லேண்டின் பைன்பேங்க் கார்டன்ஸ் (Pinebank Gardens) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நள்ளிரவு 3:30 மணியளவில் இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













