பிரிட்டனில் ஆன் விடிகோம்ப் (Ann Widdecombe) கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சவுத் யார்க்ஷயர் (South Yorkshire) பகுதியில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டெவோன் மற்றும் கார்ன்வால் (Devon and Cornwall) பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்தச் சந்தேக நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், இந்த விவகாரம் குறித்து ஆன் விடிகோம்பின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸ் பிரிவின் உதவியுடன், சவுத் யார்க்ஷயர் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று அதிகாலையில் ஆன் விடிகோம்ப் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 26 வயதுடைய மற்றொரு இளைஞரை பொலிஸார் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரிட்டனின் மூத்த அரசியல்வாதியான ஆன் விடிகோம்ப் (Ann Widdecombe) கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தீவிரமடைந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகச் சீர்திருத்தக் கட்சியின் (Reform UK) நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) அனைவருக்கும் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன் விடிகோம்ப் மீதான தாக்குதலைப் போல, கட்சியின் பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.













