செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் ஏற்படும் அச்சுறுத்தல்களை முறியடிக்க, சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என பிரித்தானிய மத்திய வங்கியின் ஆளுநர் அன்ட்ரூ பெய்லி (Andrew Bailey) வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவால் தனித்துச் செயற்பட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பொறுப்பேற்கவுள்ள நிலையில், தற்போதைய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves), மத்திய கிழக்கு மோதல்களால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து எச்சரித்துள்ளார்.
அத்துடன், மனித மூளைக்கு நிகரான AI தொழில்நுட்பம் இன்னும் சில ஆண்டுகளில் உருவாகலாம் என்பதால், அதனைக் கண்காணிக்க உலகளாவிய கண்காணிப்பு அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கூகுள் டீப்மைண்ட் (Google Deepmind) அமைப்பின் நிறுவனர் டெமிஸ் ஹஸாபிஸ் (Demis Hassabis) கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















