தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் இன்று (22) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
காரின் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு, தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான அந்த வீடு, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவருக்குச் சொந்தமானது.
சந்தேக நபர்களை அடையாளம் காணவும், தாக்குதலுக்கான நோக்கத்தைக் கண்டறியவும் கந்தர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.











