• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள் – நடவடிக்கைக்கு பறக்கும் படைகள் தயார்!

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள் – நடவடிக்கைக்கு பறக்கும் படைகள் தயார்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/12
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வழித்தட அனுமதிகள் இன்றி சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் மற்றும் உரிய பதிவுகள் இன்றி , வெளிமாவட்ட உத்தியோகஸ்தர்களுக்கு விசேட சேவையில் ஈடுபடும் பேருந்துக்காலம் என்பவற்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில், வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் ,

யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் பத்து பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது

இவ்வாறான சட்டவிரோத சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதுடன், சட்டபூர்வமாக சேவையாற்றும் பேருந்து இயக்குநர்களுக்கும் அநீதி விளைவிக்கின்றது.

அதேவேளை வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு செய்து சட்டபூர்வமாக இயங்குவதற்காக போதுமான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

இந்த விசேட நடவடிக்கையின் போது, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து சம்பந்தப்பட்ட பேருந்துகளை பரிசோதித்து, வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை ஆய்வு செய்வதுடன், அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை வழங்கப்படமாட்டாது என மேலும் தெரிவித்தார்.

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – மத்திய வங்கி ஆளுநர்!

Next Post

அமெரிக்கா-தென் கொரியா கூட்டுப் பயிற்சிகளுக்கு முன்னதாக வட கொரியா ஏவுகணை சோதனை!

Related Posts

செம்மணியில் இன்றைய  அகழ்வில்  05 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் 05 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-08-12
கீரிமலையில் குப்பை விவகாரம் –  இன்றைய தினம் கவனயீர்ப்பு நடவடிக்கையாக துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகம் !
இலங்கை

கீரிமலையில் குப்பை விவகாரம் – இன்றைய தினம் கவனயீர்ப்பு நடவடிக்கையாக துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகம் !

2026-08-12
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல்!
இலங்கை

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல்!

2026-08-12
இந்திய டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியில் புதிய முகங்கள்?
இலங்கை

இந்திய தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!

2026-08-12
சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதியை வந்தடைந்த 60க்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள்!
இலங்கை

சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதியை வந்தடைந்த 60க்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள்!

2026-08-12
கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள்!
இலங்கை

கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள்!

2026-08-12
Next Post
அமெரிக்கா-தென் கொரியா கூட்டுப் பயிற்சிகளுக்கு முன்னதாக வட கொரியா ஏவுகணை சோதனை!

அமெரிக்கா-தென் கொரியா கூட்டுப் பயிற்சிகளுக்கு முன்னதாக வட கொரியா ஏவுகணை சோதனை!

தங்காலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு!

தங்காலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு!

இந்திய டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியில் புதிய முகங்கள்?

இந்திய டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியில் புதிய முகங்கள்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.