முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியொருவரை கைவிட்டுச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆண் மற்றும் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கைது நடவடிக்கையை ஹாலிஎல பொலிஸார் இன்று (14) காலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்ட பெண் அந்தச் சிறுமியின் தாய் என்பதும், கைது செய்யப்பட்ட ஆண் அவரது காதலன் என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் இருவரும் வத்தேகம பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







