காங்கேசன்துறை ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்தியர்களையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து நாகைப்பட்டினம் நோக்கி செல்லத் தயாராக இருந்த 19 பயணிகளை நேற்று முன்தினம் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இதன்போதுஇ அவர்களில் 11 பேர் தங்கத்தை மறைத்து கடத்த முயன்றமை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களும் நேற்று மாலை மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் சந்தேக நபர்கள் 11 பேரையும் எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


















