• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரத்வத்த தோட்ட விவகாரம் : நாடாளுமன்றில் குழப்பநிலை!

நாடாளுமன்ற உறுப்பினர்களை சபையிலிருந்து வெளியேற்றினார் சபாநாயகர்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/08/23
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, சபையில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழப்பத்தில் ஈடுபட்டமையால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

மேலும், குழப்பத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான நளீன் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரர் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பிரதிநபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியது.

இதன்போது, நேற்றைய அமர்வின்போது, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் அதிக நேரம் எடுத்தமையால், பின்னால் பேசிய உறுப்பினர்களுக்கு நேரம் போதாமல் போனதாகவும், எனவே இன்றைய சபை நடவடிக்கையின்போது நேரத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யுமாறும் ஆளும் தரப்பு பிரதம கொரடாவான பிரசன்ன ரணதுங்க, கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து, இன்று சபையில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, பிரதேச சபைகளில் மக்கள் சந்திப்புக்கூட்டம் நடத்தப்படக்கூடாது எனும் போது, இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார 21 ஆம் திகதி பிங்கிரிய பிரதேச சபையில் மக்கள் சந்திப்பொன்றை நடத்தினார் என்று சபையின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

20 ஆம் திகதி நாரம்மல பிரதேச சபையிலும் மக்கள் சந்திப்பொன்று நடத்தப்பட்டது என்றும் பிங்கிரிய பிரதேச சபை அருகில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் 150 பேரளவில் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும் நளின் பண்டார தெரிவித்தார்.

இதில் கலந்து கொண்டவர்களுக்கான தேநீர், பிரதேச சபைக்குள் வழங்கப்பட்டதாக கூறினார்.

இவர் இவ்வாறு தெரிவித்துக் கொண்டிருக்கும்போது, குறுக்கிட்ட ஆளும் தரப்பு பிரதம கொரடாவான பிரசன்ன ரணதுங்க, 10.30 இற்கு பின்னர் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் சபையில் இருக்க மாட்டார்கள் என்பதால், இவ்வாறான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, நேரத்தை வீணடிக்காமல் சபை நடவடிக்கைகளுக்கு இடமளிக்குமாறு உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.

பின்னர், மீண்டும் நளின் பண்டார குறித்த பிரச்சினை தொடர்பாக பிரதமரிடம் கேள்வி எழுப்பியபோது, குறுக்கிட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன, இது சபையை குழப்பும் செயற்பாடு என்றும் சபையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் சபையை ஒத்திவைக்குமாறும் பிரதிசபாநாயகரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து, நளின் பண்டாரவின் ஒலிவாங்கி முடக்கப்பட்ட நிலையில், அவர் ஆசனத்திலிருந்து வெளியேறி சபாநாயகர் ஆசனத்திற்கு அருகில் வந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

கேள்வி கேட்க அனுமதி தருமாறு, பிரதி சபாநாயகரை நோக்கி கடும் தொனியில் அவர் கூச்சலிட்டார். இதனால், சபையில் குழப்பமானதொரு நிலைமை ஏற்பட்டது.

பிரதி சபாநாயகர், குழப்பத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களை ஆசனங்களுக்குச் சென்று அமர்ந்துக் கொள்ளுமாறு பல தடவைகள் கேட்டும் அவர்கள், சர்ச்சையில் ஈடுபட்டமையால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

10 நிமிடங்களுக்குப் பின்னர் சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளால் மக்களுக்கு நாடாளுமன்றின் மீதான கௌரவம் பாதிக்கப்படுவதாகவும் இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாமல் இருக்க, சபையில் சர்ச்சையில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான நளீன் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை இன்றைய அமர்வுகளில் இருந்து வெளியேற்றுவதாகவும் அறிவித்தார்.

Related

Tags: Athavan NewsMahinda Yapa Abeywardena
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவில் மேம்பால விபத்து-17 பேர் உயிரிழப்பு!

Next Post

கடும் வறட்சியால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறைவடைவு!

Related Posts

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!
இலங்கை

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

2026-04-22
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!
இலங்கை

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

2026-04-22
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!
இலங்கை

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

2026-04-22
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

2026-04-22
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!
ஆசிரியர் தெரிவு

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

2026-04-22
அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!
இலங்கை

அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!

2026-04-22
Next Post
கடும் வறட்சியால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறைவடைவு!

கடும் வறட்சியால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறைவடைவு!

கிழக்கில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது!

கிழக்கில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை – கூட்டமைப்பு

சரத் வீரசேகரவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை : எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

0
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

0
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

0
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

0
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

2026-04-22
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

2026-04-22
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

2026-04-22
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

2026-04-22
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

2026-04-22

Recent News

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

2026-04-22
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

2026-04-22
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

2026-04-22
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.