• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் பிக்மீ, ஊபர் சாரதிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு!

யாழில் பிக்மீ, ஊபர் சாரதிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/11/21
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
43
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் பிக்மீ மற்றும் ஊபர் சேவையைப் பயன்படுத்தும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் மீது இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

யாழில் தரிப்பிட முச்சக்கர வண்டிச் சாரதிகள், அதிகளவில் கண்டனம் அறவிடுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்திவந்த நிலையில், அண்மையில் பொது மக்கள் நலன் கருதி அங்கு பிக்மீ, ஊபர் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் குறித்த சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதிகளவான மக்கள் குறித்த சேவையைப் பயன்படுத்திவருவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தரிப்பிட முச்சக்கர வண்டிச்சாரதிகள்  கவலை தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் இதன் விளைவாக  அண்மைக்காலமாக பிக்மீ மற்றும் ஊபர் சாரதிகள் தரிப்பிட சாரதிகளால் தாக்கப்பட்டு வரும் சம்பவங்களும் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் கடந்த கடந்த வெள்ளிக்கிழமையும் பிக்மீ சாரதி ஒருவர் தரிப்பிட சாரதிகளால் தாக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து  பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போதும் பொலிஸாரும், தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக   குறித்த சாரதி கவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது குறித்து  பிக்மீ நிறுவனத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளார்.  இதனை அடுத்து குறித்த நிறுவனம் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய முறைப்பாட்டினை அடுத்து, சாரதியை நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு முறைப்பாடு பெறப்பட்டது.

இதனடிப்படையில் யாழ் பொலிஸார்  இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி குறித்த முச்சக்கர வண்டிச்சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள்  அதிகரித்து வரும் பிக்மீ, ஊபர் முச்சக்கர வண்டி  சாரதிகள் மீதான தாக்குதல்கள் மக்கள் மத்தியிலும்,  குறித்த சேவையைில் ஈடுபடும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் மத்தியிலும் பெரும் அச்சத்தை  ஏற்படுத்தி வருகின்றன.

எனவே நிலமை தீவிரமடைவதற்கு முன்னர்  இப்பிரச்சனை தொடர்பாக யாழ் மாவட்ட பொலிஸார், வட மாகாண ஆளுநர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினர் ஆகியோர் இது குறித்து அவதானம் செலுத்தி, உரிய தீர்வினை வழங்குவது அவசியமாகும்.

 

Related

Tags: Jaffna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிராம மட்ட குழுக்களை வலுப்படுத்துங்கள்!

Next Post

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக் குறித்து அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன? : சஜித் கேள்வி!

Related Posts

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
JUST IN

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2025-12-05
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!
இலங்கை

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

2025-12-05
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

2025-12-05
பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!
இலங்கை

நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

2025-12-05
சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் மண்சரிவு அபாயம் – பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள்!
இலங்கை

சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் மண்சரிவு அபாயம் – பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள்!

2025-12-05
உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!
ஆசிரியர் தெரிவு

உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

2025-12-05
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதி ரணில் உண்மையை மறைக்கின்றார்!

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக் குறித்து அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன? : சஜித் கேள்வி!

அவசர உணவு உதவி தேவை : போரை நிறுத்துமாறு உலக உணவுத் திட்டம் அழைப்பு

அவசர உணவு உதவி தேவை : போரை நிறுத்துமாறு உலக உணவுத் திட்டம் அழைப்பு

இஸ்ரேலின் கொடிய தாக்குதலுக்கு கட்டார் அரசாங்கம் கடும் கண்டனம் !

இஸ்ரேலின் கொடிய தாக்குதலுக்கு கட்டார் அரசாங்கம் கடும் கண்டனம் !

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

0
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

0
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

0
பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!

நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

0
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2025-12-05
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

2025-12-05
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

2025-12-05
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

2025-12-05

Recent News

பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2025-12-05
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

2025-12-05
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.