சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ராஷி பிரபா ரத்வத்த டிசம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
நுகேகொட நீதவான் நீதிமன்றில் அவரை இன்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மிரிஹான பகுதியில் உள்ள லொஹான் ரத்வத்தவின் மனைவியின் வீட்டிலிருந்தே குறித்த இலக்க தகடு இல்லாத, பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் மீட்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் லொஹான் ரத்வத்தவின் மனைவி கடந்த நவம்பர் 04ஆம் திகதி நுகேகொடை நீதவான் ருவினி ஜயவர்தன முன்னிலையில் தனது சட்டத்தரணி ஊடாக முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்
இதேவேளை, லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுடன் கூடிய மற்றுமொரு வாகனம் தெல்தெனிய பகுதியில் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














