• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஏமனில் மரண தண்டனை கைதியாக உள்ள நிமிஷா பிரியாவுக்காக திரட்டிய நிதியில் மோசடி!

ஏமனில் மரண தண்டனை கைதியாக உள்ள நிமிஷா பிரியாவுக்காக திரட்டிய நிதியில் மோசடி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/07/23
in இந்தியா, சிறப்புக் கட்டுரைகள், முக்கிய செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஏமனில் மரண தண்டனை கைதியாக உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதியை சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோம் தவறாக பயன்படுத்தியதாக, கொலையுண்ட தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனாலும், இந்த குற்றச்சாட்டை சாமுவேல் ஜெரோம் மறுத்துள்ளார்.

கொலையுண்ட ஏமன் பிரஜையான தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி, வழக்கை கையாளும் அதிகாரம் பெற்ற சமூக ஆர்வலரான சாமுவேல் ஜெரோம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நிமிஷா பிரியாவின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதியை ஜெரோம் முறைகேடாகப் பயன்படுத்தியதாக அப்துல் குற்றம் சாட்டியுள்ளார்.

நிமிஷாவின் குடும்பத்தின் சார்பாக இந்த வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவராக சாமுவேல் ஜெரோம் உள்ளார்.

இந்நிலையில், ஜெரோம் தன்னை ஒரு வழக்கறிஞராக தவறாக சித்தரித்துக்கொண்டு, ஏமனில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் அறிவுறுத்தல் இல்லாமல், கூட்டு நிதியுதவி மூலம் திரட்டப்பட்ட 40,000 டொலர் பணத்தை நன்கொடையை சேகரித்ததாகவும் அப்துல் ஃபத்தா மஹ்தி குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம், பல வருடங்களாக ஏமனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஏமனில் ஒரு தனியார் நிறுவனத்தில்  பணிபுரியும் ஜெரோம், நிமிஷா பிரியாவின் வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்.

ஏமனில், நிமிஷாவின் குடும்பத்தின் சார்பாக இந்த வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவராக (Power of attorney) சாமுவேல் ஜெரோம் செயற்படுகிறார்.

ஏமனில் ஷரியா சட்டத்தின்படி, மஹ்தியின் குடும்பத்திடம் மன்னிப்பு பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க நிமிஷாவின் குடும்பத்தினர் சாமுவேலுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ஏமன் சென்ற நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, சாமுவேல் ஜெரோமின் குடும்பத்துடன் ஏமனில் தங்கியிருக்கிறார்.

இந்நிலையில், நிமிஷா பிரியாவின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அப்துல் ஃபத்தா மஹ்தி முன்வைத்த குற்றச்சாட்டை சாமுவேல் ஜெரோம் மறுத்துள்ளார்.

அதன்படி, தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை எனவும் யாரோ சிலர் கூறிய தகவல் அடிப்படையில் மஹ்தியின் சகோதரர் அவ்வாறு கூறியுள்ளார் எனவும் பின்னர் தான் அதுகுறித்து உரிய விளக்கத்தை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிமிஷா பிரியாவின் வழக்குச் செலவுக்காக இந்தியாவில் திரட்டப்படும் பணம் முழுவதும் இந்திய தூதரகம் வழியாகவே ஏமனில் அவருக்காக வாதாடும் வழக்கறிஞருக்கு அனுப்பப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏமனில் தன்னை துன்புறுத்திய தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்ததற்காக நிமிஷா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி ஜூலை 16 ஆம் திகதி அவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்ட நிலையில், தண்டனை ஒத்திவைக்கப்பட்டு அவரைக் காப்பாற்ற தீவிர இராஜதந்திர மற்றும் மனிதாபிமான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இதனிடையே, கேரள தாதியரை காப்பாற்ற முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக இந்திய மத்திய அரசு கடந்த (14) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Court orderindia newsNimisha PriyaYeman
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மே மாதத்திலிருந்து காசாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Next Post

கனடாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முக்கிய தகவல்!

Related Posts

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02
யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 
இலங்கை

யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 

2025-12-02
ஜெஃப்ரி எப்ஸ்டீன்  வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!
இங்கிலாந்து

இளவரசர் ஆண்ட்ரூவின் இரண்டு முக்கிய கௌரவங்கள் பறிப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவு –  நீதி செயலாளர் தெரிவிப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவு – நீதி செயலாளர் தெரிவிப்பு!

2025-12-02
இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!
உலகம்

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2025-12-02
இலங்கை

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில்

2025-12-02
Next Post
கனடாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முக்கிய தகவல்!

கனடாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முக்கிய தகவல்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஆண்ட்ரே ரஸ்ஸல்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஆண்ட்ரே ரஸ்ஸல்!

நுகேகொடை மேம்பாலத்தில் முச்சக்கர வண்டி- லொறி மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!

நுகேகொடை மேம்பாலத்தில் முச்சக்கர வண்டி- லொறி மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

0
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

0
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

0
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

0
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

0
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02

Recent News

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.