2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளை பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாக அணுகலாம்.
குறித்த பரீட்சை கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றன.














